வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த விடயம் குறித்து வருட இறுதியில் ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.