இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றும் சில மணிநேரத்துக்குள் இலங்கையை வந்தடையவுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.
பாகிஸ்தான் பிரதமர் வருகைதரும் விமானம் இந்திய வான்வெளியை கடந்துச் செல்வதற்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. அதற்கான அனுமதியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.
எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவுக்கு சென்றபோது, தன்னுடைய வான்வெளியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.